ஜுலை 17: நேற்று 16.07.2015 இரவு 9.30 மணியளவில் முத்துப்பேட்டையில் இருந்து ஜாம்புவானோடை வழியாக பஸ் துளசியாபட்டிணம் சென்றது.
அதில் இரண்டு முஸ்லீம் சகோதரர்கள் பயணம் செய்தார்கள். அந்த பஸ்ஸை ஜாம்புவானோடை அருகே ஒரு மர்ம கும்பல் வழி மறித்தது. பஸ்ஸில் இருந்த அந்த முஸ்லீம் சகோதரர்கள் இருவரையும் கீழே இறக்கிய மர்ம நபர்கள்கள் மிருகத்தனமாக தாக்கியுள்ளார்கள்.
அதை தடுத்த பஸ் நடத்துனரையும் மர்ம கும்பல் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.
இந்த தகவல் அறிந்த SDPI சகோதரர்கள் உடனடியாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்.மேலும் முத்துப்பேட்டையை சேர்ந்த இளைஞர்களுக்கும் செய்திகள் பரவியதால் இளைஞர்களின் கூட்டம் அங்கு கூடியது.
காவல் துறை அதிகாரிகள் SDPI கட்சியினரின் புகாரை ஏற்று அந்த மர்ம கும்பல் கைது செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்ததால் இளைஞர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் நேற்று இரவு அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment