செல்போனில் பேசிய படி வாகனங்களை ஓட்டினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 11

செல்போனில் பேசிய படி வாகனங்களை ஓட்டினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.



டிசம்பர் 11: மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. "கடந்த, 10 ஆண்டுகளில் அதிகளவில் சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என தேசிய குற்ற ஆவண காப்பாகம் (என்.சி.ஆர்.பி.,) தெரிவித்துள்ளது. 2012ல் தமிழகத்தில் மட்டும் 68 ஆயிரம் சாலை விபத்துகளில் நடந்துள்ளன. 16,175 பேர் உயிரிழந்துள்ளனர். 
தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு எட்டு விபத்து நாள்தோறும் சராசரியாக 44 உயிரிழப்பு ஏற்படுகின்றன. இதையடுத்து தமிழகத்தில் விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கலெக்டர் தலைமையிலான சாலை பாதுகாப்பு குழுவினருக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. சாலை பாதுகாப்பு அதன்படி சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
பெரும்பாலான விபத்துகள் கவனச் சிதறலால் ஏற்படுகின்றன. குறிப்பாக மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டும் போது ஏற்படும் கவனச் சிதறலால் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. மொபைல்போன் பேசினால் இதையடுத்து, இருசக்கர வாகனம் ஆட்டோ, கார், பஸ், லாரி உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது மொபைல்போன் பேசிக் கொண்டு இயக்குவதை தடுக்க போக்குவரதது துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.
இதற்கான உத்தரவை தமிழகத்தில் அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும் போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது. லைசென்ஸ் ரத்து பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மொபைல்போன் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்குவது தவறு. 
இனி மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுபவரின் ஓட்டுனர் உரிமத்தை அதிகபட்சமாக 15 நாட்கள் வரை தற்காலிக நீக்கம் செய்வது தொடர்பாக “நோட்டீஸ்” வழங்கப்படும். ஓட்டுனர் உரிமம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டினால் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வோம் என போக்குவரத்துத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here