மே 02 : தமிழகத்தில் சில நாட்களாக காற்று அதிகமாக வீசத் தொடங்கியுள்ளதால் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் 2000 மெகா வாட்டுகளாக அதிகரித்துள்ளது.
காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் அதிகரித்துள்ளதால் இரு நாட்களாக மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மின்சாரம் தங்கு தடையில்லாமல் விநியோகிக்கப்பட்டும் வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருநெல்வேலியைப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் '' எங்கள் கிராமங்களில் இரு நாட்களாக கரண்ட் கட் செய்யப்படுவதில்லை. வெயில் காலத்தில் கரண்ட்டும் கட் செய்யப்படுவதால் பெருத்த சிரமத்தில் இருந்த எங்களுக்கு இரு நாட்களாக தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்து வருவதாகவும்'' தெரிவித்தனர்.

No comments:
Post a Comment