
அக்டோபர் 27: முத்துப்பேட்டையில் ஹஜ் பெருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையாக இருந்ததால் சிறார்கள் மிக மகிழ்வுடன் காணப்பட்டார்கள். பெற்றோர்கள் தாங்களின் பிள்ளைகளை அழைத்து கொண்டு தொழுவதற்கு பள்ளி வாசலுக்கு வந்தனர்.
நமதூர் நூர் பள்ளி வாசலில் 27.10.12 காலை 7.45 மணிக்கு பெண்களுக்கு ஆண்களுக்கும், தொழுகை வைக்கப்பட்டது. அதுபோல் புதுப்பள்ளியில் காலை 8 மணிக்கு ஆண்களுக்கும், 9 மணிக்கு பெண்களுக்கு தொழுகை வைக்கப்பட்டது. குத்பா பள்ளி வாசலில் 8.30 மணிக்கு தொழுகை இருந்தது. எஸ்.பி.கே.எம். மக்கா பள்ளியில் பெண்களுக்கு தொழுகை 9 மணிக்கும், ஆசாத் நகர் ஜூம்மா பள்ளியில் 8 மணிக்கும், ஜாம்புவானோடை தர்ஹா பள்ளி வாசலில் 9 மணிக்கு தொழுகை வைக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட பள்ளி வாசல்களில் நடந்த ஹஜ் பெருநாள் தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறார்கள் என்று அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பு : முத்துப்பேட்டையில் காலை 6 மணிக்கு ஆரம்பித்த மழை காலை 11 மணி வரைக்கும் விடாமல் பெய்துக்கொண்டிருக்கிறது. நூர் பள்ளி சார்பில் திடலில் வைக்கக்கூடிய தொழுகை மழையின் காரணமாக பள்ளி வாசலில் நடைபெற்றது.
NEWS PARTNER: முத்துப்பேட்டை.ORG
No comments:
Post a Comment