அக்டோபர் 27: முத்துப்பேட்டை அருகே எடையூர் சங்கந்தி கிராமம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த அறிவு எழில் சுதாகர் என்பவர் தனது நண்பருடன் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த அரியலூர் கீழதெருவை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் மீது இவர்கள் மோட்டார் சைக்கிளை மோதுவது போல் உரசி சென்றது.
இதில் ஆத்திரம் அடைந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தகராறு உருவாகி தாக்கி கொண்டதில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர். அதன் பின்னர் இந்த பிரச்சினை பெரிதாகி இருதரப்பினர் இடையே பெரும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அரிவாள், கம்பி, கட்டைகள் கொண்டு இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். இதில் ஐ.டி.ஐ. மாணவன் பார்த்திபன் மற்றும் ஜெகநாதன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையொட்டி அப்பகுதியில் பதட்டம் நிலவியது. கடை அடைப்பு மற்றும் மறியல் நடைபெற்றது. பாது காப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து எடையூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் எடையூரை சேர்ந்த பிரசாத் (34), ராஜகணேஷ் (22) ஆகியோரும் சங்கந்தியை சேர்ந்த மதியழகன் (64), ஆரியலூரைச் சேர்ந்த ஞானசேகரன் (64). குமார் (34) ஆகிய 5 பேரையும், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.பாஸ்கர் பரிந்துரையின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment