(FLASH NEWS) விநாயகர் ஊர்வளத்தில் ஒடைக்கரையில் உள்ள சகோதர் வீட்டில் கல்வீச்சு கண்ணாடி தாக்கப்பட்டது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 3

(FLASH NEWS) விநாயகர் ஊர்வளத்தில் ஒடைக்கரையில் உள்ள சகோதர் வீட்டில் கல்வீச்சு கண்ணாடி தாக்கப்பட்டது.





செப்டம்பர் 03: வருடா வருடம் நடைபெறும் விநாயகர் ஊர்வளம் இன்று முத்துப்பேட்டையில் நடைபெற்றது. சரியாக 3 மணியளவில் புறப்பட வேண்டிய விநாயகர் ஊர்வளம் மிகவும் தாமதமாக புறப்பட்டு மகரி்ப் தொழுகைக்கு தான் ஆசாத் நகர் பாலத்திற்கு வந்தடைந்தது. ஜாம்பவானேடை, ஆசாத் நகர், புதுப்பள்ளி, பங்களாவாசல், ஒடைக்கரை வழியாக வரும்பொழுது ஒடைக்கரையில் உள்ள சகோதர் வீட்டில் சரியாக 8.30 மணியளவில் கல்வீச்சு தாக்கப்பட்டது ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிகமான வீடுகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரத்திற்கும் அதிகமாக காவல்துறையிருந்தும் இது போன்ற சம்பவம் வருடா வருடம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இது காவல்துறையின் அலச்சியச்சியமே முக்கிய காரணம். இவ்வளவு காவல்துறை இருந்தும் இப்படி தாக்கப்பட்டது கண்டிக்க தக்கது.

முஸ்லிம்கள் அணைவரும் ஒன்று கூடல்

முத்துப்பேட்டையில் விநாயகர் பெயரை வைத்துக்கொண்டு கலவரம் வளர்ப்பதற்காகவே காவி கும்பல் வருடா வருடம் பிரச்சனைகளை தூண்டி கலவரம் வளர்க்க திட்டமிட்டுவருகின்றனர். வழக்கம் போலவே தவறான வார்த்தைகளை கோஷங்களாக எழுப்பி முஸ்லிம்களை சீண்டியதோடு முஸ்லிம் வீடுகளும் கல்வீசி தாக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரோ ஆயிரகணக்கில் இருந்தும் அத்துமீறும் காவிகள் மீது முறையான நடவடிக்கை இல்லை. இதனால் முஸ்லிம்கள் அணைவரும் தற்சமயம் முகைதீன் பள்ளிவாசலில் ஒன்று கூடியுள்ளனர். கூட்டம் நடைபெற்று வருகிறது காவல்நிலையம் சென்று முறையாக வழக்கு கொடுக்க உள்ளனர்.
இது வழக்கமாக நடப்பதுதான்.. வழக்கு கொடுப்பார்கள். கைது இருக்காது அல்லது நாடகம் அரங்கேற்றப்படும். முஸ்லிம்கள் ஒன்றினைந்து மிகப்பெரும் சட்ட போராட்டங்களை நடத்தாவிட்டால் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here