செப்டம்பர் 30: தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியானது. இதில் அம்மாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் கடையடைப்பு ,உண்ணாவிரதம், அமைதி ஊர்வலம் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்று காலை முத்துபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளனர் .
தகவல்:KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)







No comments:
Post a Comment