ஜனவரி 24: பட்டுக்கோட்டை, பெரிய தெரு குறிஞ்சி ஷாப்பிங் சென்டர் & கோல்டன் சூப்பர் மார்கட் உரிமையாளரும், தொண்டி மர்ஹும் மலுங்கு ஹாஜி அப்துல் ரஹீம் அவர்களின் மகனும்,சுந்துஸ்கான் சகோதரர்களின் சகோதரரும், ஷேய்க் அப்துல் காதர் சகோதரர்களின் தகப்பனாரும், ஜியாவுல் ரஹ்மான் அவர்களின் மைத்துனருமாகிய " பாட்சா " அவர்கள் இன்று 24.01.14 வெள்ளிக் கிழமை பகல் 1.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........
அன்னாரின் ஜனாஸா நாளை 25.1.14 சனிக்கிழமை மாலை பட்டுக்கோட்டை வடசேரி ரோடு பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள்,உற்றார்,உறவினர்கள்,
நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக
அறிவிப்பவர்
அன்னார் அவர்களின் மைத்துனர்
ஜியாவுல் ரஹ்மான் : +91 99423 90247
தகவல் ரஷித் அலி - சிங்கப்பூர். மற்றும்
K.S.H.சுல்தான் இப்ராஹீம் (சுனா இனா)

No comments:
Post a Comment