பிப் 25- ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினர் முஸ்லிம்களின் புனித நூலான குரான் புத்தகங்களை எரித்தது தெரியவந்தது. இதை கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இது வன்முறையாக மாறி கலவரம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஏற்கனவே 8 பேர் கொல்லப்பட்டனர். நேற்று 4-வது நாளாக கலவரம் நடந்தது. தலைநகரம் காபூல்மற்றும் நாடு முழுவதும் இப்போது கலவரம் வெடித்து உள்ளது. நேற்று நடந்த கலவரத்தில் மட்டும் 12 பேர் பலியானார்கள். தொடர்ந்து நிலைமை மோசமாக உள்ளது.
நடந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கேட்டார். ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. ஆப்கானிஸ்தானில் மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் மற்றும் மலேசியா நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்து உள்ளன.

No comments:
Post a Comment