முத்துப்பேட்டையில் 24 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டால் பொது மக்கள் அவதி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 30

முத்துப்பேட்டையில் 24 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டால் பொது மக்கள் அவதி.


24 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு : வேதனையுடன் முத்துப்பேட்டை
அக்டோபர் 30: நேற்று 29.10.2012 மதியம் மூன்று மணிக்கு மின்சார சப்ளை முத்துப்பேட்டையில் நிறுத்தப்பட்டது. இந்த செய்தியினை இடுக்கை செய்யும் இந்த நேரம் வரை (30.10.12 மாலை 5 மணி) மின்சாரம் முத்துப்பேட்டைக்கு பகுதிக்கு வரவில்லை. மின் துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளை போனில் தொடர்புக்கொண்டு முத்துப்பேட்டைக்கு மின்சாரம் இல்லை என்று சொன்னால் அதற்குரிய பதிலை அதாவது அந்த இடத்தில் மரம் மின் கம்பத்தில் விழுந்து விட்டது. இந்த மின்கம்பத்தில் அந்த பிரச்சனை தற்காலிக பதில் வருகிறது.
14 மணி நேரம் 16 மணி நேரம் மின்வெட்டு கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் 24 மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்பட்ட ஊராக நமதூர் தான் இருக்கும். இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதால் பெற்றோர்கள் குழந்தைகள் வியாபாரிகள் என்று அனைத்து தரப்பு மக்களும் அவதிக்கும் வேதனைக்கு உள்ளாகி வருகிறார்கள். நல்ல வேளை கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடப்பட்டதால் பெற்றோர்களுக்கு சிரமங்கள் கொஞ்சம் கம்மியாக
உள்ளது. இருப்பினும் கொசு தொல்லை தான் அதிகமாக முத்துப்பேட்டையில் உள்ளது. என்ன செய்வது..?..!

முத்துப்பேட்டையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதன் சில புகைப்படஙகள் வாசகர்களின் பார்வைக்காக




NEWS PARTNER முத்துப்பேட்டை.org

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here