மே 02: அதிரை இளைஞர்கள் மற்றும் Terri Wear இணைந்து நடத்தும் 10th,11th,12th முடித்த மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் (08-05-2015) வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் லாவன்யைா மஹாலில் மாலை 3.00 மணியளவில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியை M.ஆசியதாரா M.A.,M.Phil.,Ph.D., அவர்கள் (அடுத்து என்ன படிக்கலாம்?) என்ற தலைப்பிலும் , ACCESS INDIA COUNSELLOR வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி B.A.,B.L., அவர்கள் (கல்வி சம்மந்தமாக பெற்றோர்கள்,மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்) அளிப்பார்.
மேலும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி சம்மந்தமான சிறப்பு பயிற்சிகளும் இந்த நிகழ்ச்சியில் அளிக்கப்படும்.இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு:பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


No comments:
Post a Comment