செப்டம்பர் 06: கடைகளுக்கு தீவைத்தவர்கள் மற்றும் கல்வீசியவர்களை கண்டித்து இன்று முத்துப்பேட்டையில் முழுவதும் கடையடைப்பு (படங்கள் இணைப்பு).
வர்த்தகர்களுக்கு ஓர் வேண்டுகோள்..
முத்துப்பேட்டையில் கடந்த 2, 3 தினங்களாக வியாபார கடைகளை தீயிட்டு கொளுத்தியும், கல்வீசி எரித்தும் சென்று விடுகிறார்கள். இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
அதனை கண்டிக்கும் வகையில் இன்று 06-09-2014 மதியம் 1 மணி முதல் 5 மணி வரை கடையடைப்பு செய்து அடையாள வேலைநிறுத்தம் செய்திட கேட்டுக்கொள்கிறோம். இதனை காவல் துறையினரும், உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்கிட வேண்டுகின்றோம்.
இங்கணம்
வர்த்தக சங்கம், வர்த்தக கழகம், பெரியகடைத்தெரு வர்த்தக சங்கம்
முத்துப்பேட்டை
புகைப்படங்கள்
முகம்மது ஆசிப்










No comments:
Post a Comment