மார்ச் 09: மலேசியாவிலிருந்து நேற்று பெய்ஜிங் சென்ற விமானம் கட்டுபாட்டு எல்லையை தாண்டியதால் விமானம் மாயமாகிவிட்டது என்ற செய்தி உங்களை வந்தடைந்திருக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் காணாமல் போன விமானம் ஒரு தீவிலே விழுந்து நொறுங்கியதாகவும், அதில் பயணித்த 239 நபர்களும் இறந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில்....
Malaysian Airlines அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்தி தெரிவிப்பதாவது,
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்ற விமானம் காணாமல் போனது மட்டுமே உண்மை என்றும், தீவில் விழுந்து நொறுங்கிவிட்டது, அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் அல்லது இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் அனைத்தும் வதந்தியாகும்.
விமானம் காணாமல் போனது மட்டுமே உண்மை என்றும், மேற்படியான தகவல் எதுவும் உண்மை இல்லை என்றும் Malaysian Airlines அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகையால் அவர்களுக்காக இறைவனிடத்தில் நீங்களும் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்.
நன்றி!
மேலும் விரங்களுக்கு
http://www.malaysiaairlines.com/my/en/site/dark-site.html


No comments:
Post a Comment