உம்ரா உணர்த்திய உண்மைகள்.........! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 12

உம்ரா உணர்த்திய உண்மைகள்.........!

உருக்கும் தங்கம் போன்றேநான்
****உணர்ந்து கொண்டேன் உம்ராவில்
நெருக்கம் இறைவன் மீதினிலே
****நினைவில் நிரம்பக் கண்டேனே

ஏழு முறைக ளோட்டத்தில்
****இரத்த ஓட்டம் சீராகிப்
பாழும் நரக விடுதலையும்
****பாவமு மழியக் கண்டேனே!


மனமு மிறுக்கம் விட்டதுவே
****மகிழ்வில் நிரம்பி வழிந்திடவே
தினமும் உம்ரா செய்ததினால்
****தேகப் பயிற்சி பெற்றேனே!


நாளை மஹ்ஷர் நினைவினிலே
****நாங்கள் நின்ற வேளையிலே
மூளை முழுதும் பயவுணர்வால்
****மூழ்கிப் போகக் கண்டேனே !

புரட்டிப் போட்ட வியப்புடனே
****புத்தம் புதிய வாழ்வெனக்கு
புரட்சி செய்த மாற்றந்தான்
****புதிதாய்க் கண்டு கொண்டேனே!


புனித உம்ரா செய்ததினால்
****புடமிடு தங்க மாகினனே
இனியும் தொடராய் இறையவனே
****இதனைச் செய்ய அருள்வாயே..!


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)அலை பேசி: 00971-50-8351499வலைப்பூத் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here