முத்துப்பேட்டையில் சுகாதார சீர் கேடு ஒரு பார்வை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, October 22

முத்துப்பேட்டையில் சுகாதார சீர் கேடு ஒரு பார்வை.

சுகாதார சீர் கேடு : முத்துப்பேட்டை ஒரு பார்வை
அக்டோபர் 22: முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக திருவாரூர் மாவட்டத்தில் அதிகமான அளவிற்கு மழை பெய்த ஊராக நமதூர் இருந்தது என்பதினை நாம் அறிவோம். தற்போது முத்துப்பேட்டையில் பகுதியில் மழை பெய்வதும், மேகம் இருள் சூழ்ந்தும் இருக்கிறது. சில பள்ளிக்கூடங்கள் 22.10.12 விடுமுறையாக இருந்தது, சில பள்ளிக்கூடங்கள் குறைந்த அளவில் சிறார்களுடன் திறந்தும் இருந்தது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல குழந்தைகளுக்கு சளி, இருமல், ஜீரம் என்று மருத்துவமனைகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். சுகாதார சீர் கெடு தற்போது முத்துப்பேட்டையினை எட்டி பார்க்க ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் டெங்கு காய்ச்சல், ஒரு பக்கம் பன்றி காய்ச்சல் வந்து விடுமோ என்று அனைத்து பொது மக்களும் பீதியுடன் இருக்கிறார்கள்.
சுகாதாரத்தினை நமதூரில் பேணி பாதுகாக்க வேண்டி முழு பொறுப்பும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு இருந்தாலும், பெற்றோராகிய நாமும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். மழை பெய்து வருவதால் குழாய்களில் வரும் குடிநீர் மாசுபடிந்து காணப்படுகிறது. ஆகையால் குடிநீரினை சூடுப்படுத்தி குடிக்க வேண்டும். அல்லது தற்போது முத்துப்பேட்டையில் பகுதிகளில் 20, 25 லிட்டர் கேன் வடிவில் உள்ள குடிநீர் கம்பெனிகள் அதிகம் வந்து விட்டன. அதனை நாம் பயன் படுத்தலாம்.(தற்போது பல வீடுகளில் கேன் தண்ணீர் வாங்க ஆரம்பித்துள்ளாhர்கள்)
முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட குளம், மற்றும் குளக்கரைகளில் பன்றிகள், நாய்கள், ஆடு, மாடுகள் மேய துவங்கி விட்டன. ஆகையால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கண்டிப்பாக நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. ஆகையால் குழந்தைகளை வெளியே விளையாடுவதற்கு பெற்றோர்கள் அனுமதி அளிப்பதில்லை.
ஆகையால், இந்த செய்தியினை காணும் முத்துப்பேட்டை வார்டு உறுப்பினர்கள் அந்தந்த பகுதிகளில் எந்த மாதிரியான சுகாதார சீர் கெடுகள் உள்ளன என்பதினை பேரூராட்சி செயல் அலுவலரிடம் தெரியப்படுத்தினால் அதற்குரிய உரிய நடவடிக்கைகள் அவர்கள் செய்வதற்கு வாய்ப்புண்டு.
வோட்டு கேட்க மட்டும் தான் மக்களை சந்திப்பீர்களா..! அல்லது மக்களின் பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வினை எடுப்பீர்களா..! பொது மக்கள் எதிர்பார்ப்பது இரண்டாவது தீர்வினை தான்..






NEWS PARTNER: முத்துப்பேட்டை,ORG

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here