ஜுலை 30: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் இன்று காலை 9.30 மணிக்கு அவரது வீட்டில் இருந்து முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு எடுத்துவரப்பட்டது. முஸ்லிம் நிர்வாக கமிட்டி யினர், அப்துல் கலாம் உடல் அடங்கிய பெட்டியை சுமந்து வந்தனர்.
காலை 9.55 மணிக்கு உடல் பள்ளிவாசல் வந்ததும் இஸ்லாமிய முறைப்படி ஜனசா தொழுகை நடை பெற்றது. முன்னதாக முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் இமாம் அப்துல்ரகுமான் யாசின் ஓதினார். தொடர்ந்து அப்துல் கலாம் ஆத்ம சாந்திக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.எல்.ஏ. ஹசன்அலி ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராள மான மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென் னையை சேர்ந்த 2 மாணவர்கள் தேசிய கொடியை ஏந்தியபடி பள்ளிவாசலில் காலை முதல் நின்று கொண்டிருந்தனர்.சிறப்பு தொழுகை முடிந்ததும் அப்துல் கலாம் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி சடங்கு நடைபெறும் பேய்கரும்பு திடலுக்கு கொண்டு செல் லப்பட்டது.
ஊர்வலத்தில் லட்சகணக்கான் மக்கள் கலந்து கொண்டனர் பாரத் மாதவுக்கு ஜெ என்ற கோஷமுடன் ஊர்வலம் நடந்து வருகிறது
அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படும் கிழக்காடு திடல் கடந்த 3 நாட்களாக பரபரப்பாக காணப்பட்டது. தமிழக அரசு இந்த இடத்தை அப்துல் கலாம் உடல் அடக்கத்துக்கு தேர்வு செய்ததில் இருந்து அங்கு அதற்கான பணிகள் தொடங்கின. மாவட்ட கலெக்டர் நந்தகுமார் ஏற்பாட்டில் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், சுந்தர் ராஜன் ஆகியோர் இன்று காலை 7 மணிக்கே அங்கு சென்று இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை கவனித்தனர். அங்கு முக்கிய பிரமுகர்கள் அமரும் இடங்கள், அவர் களுக்கான பாதுகாப்பு, பொமக்கள் இருக்கும் இடம் போறவை குறித்து கேட்டறிந்தனர்.
கிழக்காடு திடலில் போசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுபு பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது. காலை 10 மணி அள வில்தான் இந்த திடலுக்கு அப்துல்கலாம் உடல் வரும் என கூறப்பட்டநிலையிலும் காலை 6 மணியில் இருந்தே மக்கள் அங்கு குவிய தொடங் கினர். அவர்கள் இறுதி சடங்கு நடக்கும் திடலுக்குள் நுழைந்துவிடாதபடி பாகாப்பு ஏற்பாக தடுப்பு கம்புகள் அமைக்கப் பட்டு இருந்தன. இருப்பினும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர்.
ராமநாதபுரம் எல்லை யிலேயே தனியார் வாக னங்கள் நிறுத்தப்பட்டு விட் டன. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் இறுதி சடங்கு திடலில் குவிந்தனர்.
கடலோர பாகாப்பு படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பா கூறுகையில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள் ளதையட்டி கடலோர பகுதிகளில் தீவிர பா காப்பு செய்யப்பட்டு உள்ளது. 4 நவீன போக் கப்பல்கள், ரோந்து கப்பல்கள் போறவை பாகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளன. இந்த பணி நாளை வரை நீடிக்கும் என்றார்.










No comments:
Post a Comment