முத்துப்பேட்டை அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்ட சிறுவன். முத்துப்பேட்டையில் பதற்றம். - BBC

BBC

Sunday, October 12

முத்துப்பேட்டை அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்ட சிறுவன். முத்துப்பேட்டையில் பதற்றம்.






அக்டோபர் 12: முத்துப்பேட்டை அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்ட சிறுவன். துளசியாப்படிணம் அசாலின் மகன் அப்துல் ரஹுப் என்ற சிறுவனை தில்லைவிளாகத்தில் மர்மக்கும்பளால் தாக்கப்பட்டார் பலத்தகாயத்துடன் தஞ்சைக்கு அனுப்பப்பட்டார். இன்று மதியம் முத்துப்பேட்டை செல்வதற்காக துளசியாப்படினத்தில் காத்துக்கிடக்கும் போது அவ்வழியாக ஒரு பைக் வந்நது. அந்த பைக்கில் லிப்ட் கேட்டு முத்துப்பேட்டையை நோக்கி வந்துக்கொண்டு இருந்தனர். தில்லைவிளாகம் வழியே வரும் பொழுது  மர்ம நபர்கள் அந்த சிறுவனையும் அந்த பைக்கில் வந்த நபரையும் கடுமையான முறையில் தாக்கிவுள்ளனர். இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.  முத்துப்பேட்டை அரசுமருத்துவமணையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போழுது தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். முத்துப்பேட்டை அரசு  மருத்துவமனையில் பொது மக்கள் கூட்டம் மற்றும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.



தகவல்: சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

புகைப்படங்கள்: அப்துல் சலாம்

No comments:

Post a Comment