மே 29: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சின்னாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த முத்தைய்யன் மனைவி மாரியாயி(80) நேற்று முன் தினம் இறந்து விட்டார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த சிங்கார் மகன் பத்மநாதன்(48) என்பவர் கலந்து கொண்டு இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி குண்டுகளை வெடித்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக இவரது வலது கையில் பட்டு வெடித்ததில் வலது கை சிதறி துண்டானது, பலத்த காயம் அடைந்த பத்மநாதனை தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
தகவல்: அதிரை நியூஸ்

No comments:
Post a Comment