சென்னையில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் தனியார் ஆம்னி பஸ் புளியமரத்தில் மோதியது விபத்து. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 21

சென்னையில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் தனியார் ஆம்னி பஸ் புளியமரத்தில் மோதியது விபத்து.


திருவாரூர் அருகே தனியார் ஆம்னி பஸ் புளியமரத்தில் மோதியது
நவம்பர் 20: சென்னையில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டது. பஸ்சை திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த வின்சென்ட் ஓட்டி வந்தார். இதில் 15 பயணிகள் பயணம் செய்தனர்.
 
இந்தநிலையில் இன்று காலை 5 மணியளவில் பஸ் திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பனிமூட்டமாக இருந்ததால் திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ரோடு அருகே இருந்த பெரிய புளியமரத்தின் மீது மோதியது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டிரைவர் வின்சென்ட் மட்டும் படுகாயம் அடைந்தார். கண்டக்டருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
 
உடனே டிரைவர் வின்சென்ட்டை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்னை அளிக்கப்பட்டு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here