முத்துப்பேட்டை அலையாத்திக்காடு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, February 13

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு 
Add caption


இதை பார்த்தவர்கள் பெரும்பாலும் தற்போது வெளிவந்த பேராண்மை சினிமாவில் கண்டுகளித்து இருக்கலாம். அந்த சினிமாவில் கூட காதல்பட நடிகை ஆற்றில் மூழ்கி இறக்கும் காட்சி இந்த அலையாத்திக் காட்டின் அருகிலே ஓடும் ஆற்றை படம்பிடித்து இருப்பார்கள். இந்த அலையாத்திக் காட்டின் அருகிலே ஓடும் ஆறு மிகப்பெரிய ஆழமில்லை. மிகவும் சாதரனதுதான்....ஆனால் கடல் அருகிலே சென்றால் அதிக ஆழமாக இருக்கும்....!

முத்துப்பேட்டை மற்றும் அருகில் வசிக்கும் மக்கள் அனைவரும் அலையாத்தி காட்டிற்கு சென்று கூட்டாஞ்ச்சோறு சமைத்து சாப்பிட்டுவிட்டு சந்தோசத்தை கழிக்காதவர்கள் யாருமில்லை என்பது அதன் ஊர்க்காரர்கள் அனைவரும் அறிவார்கள். இப்படி சென்று சந்தோசமாக பொழுதைக் கழித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவமானால் நமது உள்ளத்தில் சந்தோசம் கொள்ளைக்கொண்டு இருக்கும் என்பது உண்மை.

அந்த காட்டினுள் எவ்வித அச்சமில்லாமல் (ஆனால் கொடிய சில மிருகம் இருக்கிறது தொந்தரவு இல்லை), அந்நியர்களின் தொந்தரவு இல்லாமலும், நமக்கு சாதகமான சூலில் அமைந்துள்ளது. அடுத்த கரையில் நின்று கூப்பிட்டால்கூட எதிர் கரையில் வீடு கட்டியிருக்கும் வீட்டுக்காரர் ஓடிவரும் சூழலில் அமைந்துள்ளது. இந்த காட்டினுள் விளையாடுவதற்கு விரும்புவோமானால் கொஞ்சம் தூரம் விசைப்படகில் சென்று சந்தோசங்களை கழித்து விட்டுவறலாம்..!

அருகிலுள்ளவர்கள் ஒரு நாள் தங்கி சமைத்து சாப்பிட்டுவிட்டு சந்தோசத்தை கழித்துவிட்டு வருவதற்கு ஆயத்தமாக அந்த கட்டிலுள்ளவர்கள் அனைவரும் குடும்பத்துடன் செல்வார்கள். என்ன விளையாட்டு? கபாடியா? கால்பந்தா? கிரிக்கெட்டா? நம் எண்ணம்போல்....!

நான் பலகோடி ரூபாய் சம்பாதித்தாலும் கிடைக்காத சிறிய சந்தோசம் இதுபோன்ற சமயங்களில் கிடைக்கக்கொடியதே நாம் அனைவருக்கும் மனநிம்மதியை தருகிறது என்பதை எண்ணிப்பார்க்கையில் நமக்கும் நேரம் கிடைக்காதா? குடும்பத்துடன் சென்று கும்மாளம் போடுவதற்கு! என்று ஆசைப்படுகிறோம்...! அல்லாஹ்வின் உதவியால் வாய்ப்புகள் வரட்டும்...என்று காத்திருக்கிறோம்....தூரத்தில் வசிப்பவர்கள்...! இன்ஷா அல்லாஹ்...! முழுக்கதையைப் பிறகு பார்ப்போம்...! இன்ஷா அல்லாஹ்...!

அலையாத்திக் காட்டிற்கு செல்லும்போது கடலையும் ரசிக்கலாம். உண்மையில் பலதூரம் சென்று ரசிப்பதைவிட அருகில் இருப்பதை மனமகிவோடு ரசித்தால் நாம் மீட்சிப்பெரலாம்...! என்பது உண்மை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here