மார்ச் 29: முத்துப்பேட்டைதேர்தல் பிரச்சாரத்தின்போது நாகை பாராளுமன்ற அதிமுகவேட்பாளர் கோபாலின் வாகனத்தின் பின்பக்கம் தனி மினி டோர் வண்டியில் எம்.ஜி.ஆர்.போன்று தோற்றம் அடைந்த ஒருவர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு மக்களிடம் சைகை காட்டிக் கொண்டு பிரச்சாரம் துவக்கம் முதல் முடியும் வரை வந்தார். அவரை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால் பிரச்சாரத்தின் போது வந்த அதிமுக-வினர் அவரை ஒரு பெரிதாகவே நினைக்காமல் வந்தனர். அவர் மட்டும் தனி ஆளாக வண்டியில் நின்று கொண்டு வாக்கு சேகரித்துக் கொண்டு வந்தார். இது எம்.ஜி.ஆர் விசுவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை


No comments:
Post a Comment