மகனின் உயிரைக் காப்பாற்ற தனது சொந்த ஈரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கிய தந்தை...! - BBC

BBC

Wednesday, January 22

மகனின் உயிரைக் காப்பாற்ற தனது சொந்த ஈரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கிய தந்தை...!


ஜனவரி 22: மகனின் உயிரைக் காப்பாற்ற தனது சொந்த ஈரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கிய தந்தை...!

தந்தையொருவர் தனது ஒன்றரை வயது மகனது உயிரைக் காப்பாற்ற அவனுக்கு தனது சொந்த ஈரலின் 20 சதவீதத்தை தானமாக வழங்கிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

லான்கஷியரைச் சேர்ந்த தாரிக் முஷ்டாக் என்பவரே தனது மகனான மொஹமட் அலி தாரிக்கிற்கு தனது சொந்த இருதயத்தின் ஒரு பகுதியை வழங்கி அவனது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

மொஹமட் 9 வார குழந்தையாக இருந்த போது, அவனுக்கு உயிராபத்தான ஈரல் நோய் ஏற்பட்டிருப்பது இனங்காணப்பட்டது.

இந்நிலையில் அவனைப் பரிசோதித்த லீட்ஸிலுள்ள சென் ஜோன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் , அவனது உயிரைக் காப்பாற்ற அவனுக்கு உடனடியாக ஈரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து முஷ்டாக் தனது ஈரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி தனது மகனது உயிரைக் காப்பாற்ற தீர்மானித்தார்.

தந்தையும் மகனும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம் !!

No comments:

Post a Comment