
செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பங்களாவாசல் அருகில் உள்ள சகே. இத்ரீஸ் த/பெ ஹாஜா அலாவுதீன் என்பரின் வீடு கற்களை கொண்டு தாக்கப்பட்டது. ஊர்வளத்தில் சென்ற சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்னர். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A. அபூபக்கர் சித்திக் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஊர்வலத்தில் வீட்டினுல் கல்லெறிந்து தாக்கிய கயவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தகவல் : MUTHUPET PFI
No comments:
Post a Comment