சாக்லேட் சாப்பிட்டதால் 3 மணி நேரம் ஓட வைத்து தண்டிக்கப்பட்ட சிறுமி மரணம் - BBC

BBC

Friday, February 24

சாக்லேட் சாப்பிட்டதால் 3 மணி நேரம் ஓட வைத்து தண்டிக்கப்பட்ட சிறுமி மரணம்


சாக்லேட் சாப்பிட்டதால் 3 மணி நேரம் ஓட வைத்து தண்டிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியை சேர்ந்தவள் சவன்னா ஹார்டின். 9 வயது சிறுமி. 3-வது வகுப்பு படித்து வந்தாள்.
இவள் தனது சித்தி ஜெசீகாமே ஹார்டின் (27), பாட்டி ஜாய்சி ஹார்டின் காராட் (47) ஆகியோருக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிட்டு விட்டாள். இதை அறிந்த இருவரும் அவளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தனர்.
அதாவது தனது வீட்டை சுற்றி தொடர்ந்து 3 மணி நேரம் ஓடும்படி கட்டாயப் படுத்தினர். அதை இருவரும் உட்கார்ந்தபடி ரசித்து கொண்டிருந்தனர். இதனால் ஓடி களைத்த சவன்னா ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நாக்கு வறட்சியால் திடீரென தனது பாட்டியின் காலடியில் மயங்கி விழுந்தாள்.
உடனே அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சவன்னாவின் பாட்டி ஜாய்சீயையும், சித்தி ஜெசீகாமேவையும் கைது செய்தனர்.

No comments:

Post a Comment