
நவம்பர் 15: முத்துப்பேட்டையில் கடந்த பனிரெண்டு ஆண்டுகளாய் அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வியினை மட்டுமின்றி, கணினிப்பொறி சம்பந்தமாக மென்பொருள் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் "முத்துப்பேட்டை கல்வி பேரவை” (MUTHUPET EDUCATION FORUM) யின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வு இன்ஷா அல்லாஹ். குத்பா பள்ளி வாசல் – வணிக வளாகத்தில் மிக விரைவில் நடைபெற உள்ளது.
ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனரும், கல்வி ஆர்வலருமாகிய M.A. முஸ்தபா அவர்களால் 25.2.2000 ஆம் ஆண்டு முத்துப்பேட்டை கல்விபேரவை என்ற அமைப்பு உருவானது. முத்துப்பேட்டை கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற அரிய நோக்கில் இந்த பேரவை அமைக்கப்பட்டது.
சென்னை – கணினிப்பொறி மென்பொருள் கல்லூரியின் (CSC – COMPUTER SOFTWARE COLLEGE) ஆக்கப்பூர்வமான மென்பொருள் சம்மந்தமாக உள்ள பாடங்களை திறன்பட்டவர்களை கொண்டு நடத்தி வருகிறது.
இன்ஷா அல்லாஹ்.. முத்துப்பேட்டை கல்விபேரவையின் புதிய கட்டிட திறப்பு விழாவும் மற்றும் கல்விபேரவையின் 13 ஆம் ஆண்டு துவக்க விழாவும் மிக விரைவில் நடைபெற உள்ளது. மேன்மேலும் நல்லதொரு வளர்ச்சியினை நோக்கி முத்துப்பேட்டை கல்விபேரவை அடைய வேண்டுமாய் அனைவரும் ஏக இறைவனிடத்தில் துஆ செய்யவும்.
MEFகட்டிடப்பணிகள் நடந்துக்கொண்டிருக்கும் சில புகைப்படங்கள்
NEWS PARTNER MUTHUPET.ORG
No comments:
Post a Comment