நவம்பர் 12: முத்துப்பேட்டை மின் வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து வருபவர் ஜெயராமன். இங்கு உதவியாளராக இருப்பவர் கார்த்திக். இவர்கள் இருவரும் உரிய அனுமதியின்றி வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மின் வாரிய தனிப்படையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஜெயராமன், கார்த்திக் ஆகியோர் வீடுகளுக்கு உரிய அனுமதியின்றி மின் இணைப்பு கொடுத்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 2 பேரையும் மன்னார் குடி மின் வாரிய செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment