நவம்பர் 03: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு டிசம்பர் 19ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் ஜனவரி 10ம்தேதி வரை நடைபெறும்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவியருக்கு டிசம்பர் 19ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 19ம் தேதி தொடங்கி ஜனவரி 10ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 7ம் தேதி வரையும் நடைபெறும்.
காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் கொடுக்கப்படும். வாசித்துப் பார்க்க கால் மணி நேர அவகாசம் தரப்படும். அதன் பின்னர் 10.15 மணிக்குத் தேர்வு தொடங்கும். பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெரும்.
No comments:
Post a Comment