முத்துப்பேட்டையில் கேஸ் சப்ளை செய்வதில் குளறுபடி பொது மக்கள் ஆவேசம்.!! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 1

முத்துப்பேட்டையில் கேஸ் சப்ளை செய்வதில் குளறுபடி பொது மக்கள் ஆவேசம்.!!


மார்ச் 01 : முத்துப்பேட்டையில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களை திருத்துறைப்பூண்டியிலிருந்து இன்டன் கேஸ் சிலிண்டர்கள் மரியா கேஸ் நிறுவனம் சப்பளை செய்து வருகிறது. சமீப காலமாக கேஸ் சிலிண்டர்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் எப்பொழுதாவது லாரியில் வந்து சிலிண்டர்களை சப்பளை செய்யும் போது பல்வேறு குளறுபடிகள், இடைத்தரகர்கள் தொந்தரவு என மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. என்று புகாருக்கு மேல் புகார் எழுந்துள்ளது ஆனால் சப்ளை செய்யும் நேரங்களில் போலிஸ் பாதுகாப்பு போடுவது வழக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வழக்கம் போல் நேற்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் லாரியில் சிலிண்டர் விநியோகம் செய்தனர். அதில் மொத்தம் 290 சிலிண்டர் மட்டுமே கொண்டுவரப்பட்டன. ஆனால் நீண்ட வரிசையில் சுமார் 500 ௦௦க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அப்படி சப்பளை செய்யும் போது இடைத்தரகர்கள் கூடுதலாக சிலிண்டர்களை பெற்று சென்றதால் அப்போது மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. உடன் அப்பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் சிலிண்டர்கள் வந்த வண்டியை முற்றுகையிட்ட மக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகம் ஏற்பட்டு மறியலும் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

thanks : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here