முத்துப்பேட்டையில் அகல ரயில்பாதை அமைக்க SDPI நடத்தும் ரயில் மறியல் போராட்டம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 15

முத்துப்பேட்டையில் அகல ரயில்பாதை அமைக்க SDPI நடத்தும் ரயில் மறியல் போராட்டம்.


முத்துப்பேட்டை, பிப்ரவரி 15 : முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் மாவட்ட பொது குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கிய தீர்மானமாக திருவாரூரிலிருந்து, காரைக்குடி வரை அகல ரயில்பாதை திட்டத்தை உடனே அமைக்க கோரி வருகின்ற 26 .02 .2012 அன்று மதியம் 2 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. இதில் அனைத்து பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசு ஊழியர்களும் மற்றும் அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டுமாய் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 


thanks for : muthupettaiexpress.com

Post Bottom Ad

Responsive Ads Here