போர் விமானம் மூலம் இன்று இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 60 வயதுள்ள காவலாளி ஒருவர் பலியாகியுள்ளார் அவருடைய மகன் காயத்துடன் உயிர் தப்பினார்.

கடந்த சனிக்கிழமையன்று பாலஸ்தீனம் பகுதியில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் தாக்கி இஸ்ரேலிய பெண் படுகாயம் அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் குழிகள், ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட 4 இடங்களை குறிவைத்து குண்டுகளை வீசினோம் என்று இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
